Mar 6, 2015

தெருவில் சிதறி கிடக்கும்
பூக்களை போல 
என் மனமெங்கும்
சிதறி கிடக்கிறது
நீ வீசிச் சென்ற புன்னகை!!

Mar 5, 2015



ராட்டினம்
சுற்ற ஆசைப்படும்
குழந்தையை போல்,
என் மனம்
எப்போதும் உன்னையே
சுற்ற ஆசைப்படுகிறது
!!
நம் காதலை
கரைக்க நினைத்தேன்
என் கண்ணீரில்,
கண்ணீர் 
கரைந்து காலியான  
பின்னும்
மிச்சம் இருந்தது
நம் காதல் மட்டுமே!!

  
பிச்சை எடுத்த சிறுமிக்கு  
ஐந்து ருபாய் கொடுத்தேன்
பசிக்கு உதவும் என்று, 
ஓடிச்சென்று,

ஐஸ்க்ரீம் வாங்கியவளின் 
கண்களில்  தெரிந்தது
கடவுளின் சந்தோஷம்!!
நீ 
என் கன்னத்தில் 
முத்தமிட்டதால் பார்
நான் மட்டும் இல்லை,
என் பெயரும் கூட
வெட்கத்தில் சிவந்துவிட்டது
தினமும்
நமக்குள் நடக்கும்
ஊடல்களுக்கு நடுவே
ஒளிந்துள்ள உன்  காதலை  
தேடிப்பிடித்தேன் உன் கண்களில்!
பாறையில்
இருந்து
கசிந்து கொண்டே
இருக்கும் நீர் போல,
என்
மனதில் இருந்து
கசிந்து கொண்டே
இருக்கும்,
உன் மேல்
எனக்குள்ள காதல்!!!

ரயில் சினேகங்கள்!!!

ரயில் சினேகங்கள்!!!
அரக்க பரக்க ஓடிவந்து, மூச்சிரைக்க
ரயிலேறி,இடம் பார்த்து அமர்ந்து,
எதிரே இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லி,
நான் திருச்சிங்க, நீங்க?என ஊர் கதைகள் பேசி,
வாங்கும் திண்பண்டங்களை அவர்களோடு பகிர்ந்து உண்டு,
குழந்தைகள் படிப்பு, பள்ளி,
கல்லூரி செலவுகள், நாட்டுநடப்பு,
அரசியல்,சினிமா பேசி,
வேலைவாய்ப்பு பற்றி அரட்டை முடித்து,
பொழுது போய்,தூங்கி எழுந்து,
பல் விலக்கி,காபி குடித்து,
மறுபடி
 ஒரு குட்மார்னிங் சார்!! சொல்லி,
இரண்டு
 நிமிட உரையாடல் பின்னர்,
இறங்க வேண்டிய இடம் வருமுன்
மூட்டை
 முடிச்சை தயார் செய்து,
சரி
 சார்.. அப்புறம் பார்க்கலாம்!!
என்றொரு பெரிய
சிரிப்புடன் முடிந்து போகும்,
நாம்
 கடந்து செல்லும் ரயில் சினேகங்கள்!!


 என்னை 
மொத்தமாய் உருகி 
வழிந்தோட செய்யும் ரகசியம்,
உன்
இதழ் முத்தத்திற்கு மட்டுமே தெரியும்!!
உன் உதடுகள்
வேண்டாம் வேண்டாம் என்றாலும், 
என் அருகாமையை
நீ விரும்புகிறாய் என்பதை,
உன் கண்கள் 
காட்டிக்கொடுத்து விடுகிறது!

என் காதல் உனக்கு புரிந்தாலும்,
புரியாமல் இருப்பது போல் நடிக்க
உன்னால் மட்டுமே முடியும்!!
அந்நியனாய் நம்மைப் பார்க்கும்
இலங்கை மனிதர்க்கு
நம் அன்னை நாட்டில் வாழும்
சகோதரப் பாசம் தெரியவில்லை..
எனவே
சித்திரையிலும் நித்திரை தொலைத்து
சிந்தை நித்தமும் கலங்கி
சிந்தாத ரத்தம் சிந்தி
சோர்ந்து விடாதே தமிழனே
நீ தரை வீழ்ந்தாலும்,
உன் தியாகம்
இன்னொரு தமிழனை
வாழ வைக்கும்
என்று நிம்மதியாய் நீ உறங்கு!
விரைவில் ஒரு நாள்
ஈழத்து பாசம் வெல்லும்
இலங்கையின் மோசம் கொல்லும்!!!

நிம்மதியாய் நீ உறங்கு!!!

நீ விரும்பிய
ஐஸ்க்ரீம்  வாங்கி,
நாம் இருவரும்
உண்ணும் போது,
உன் நுனி நாக்கின்
குளிர்ச்சியை தாங்காமல் 
உருகி வழிந்தோடியது
ஐஸ்க்ரீம்!!  
காதலால் கசிந்துருகி,
களவு போன மனம்,
அவளிடமே திரும்ப வந்தது,
கசங்கிய நிலையில
விடுதலைப் பத்திரமாய்!!
காலையில்
கதிரவனின் முகத்தில் முழிக்கவும்,
வழியில் கோயில் பிள்ளையாரை
தரிசிக்கவும்,
சாலை 
கடக்கும் முதியோர்க்கு
உதவவும்,
அலுவலகத்தில் உற்சாகமாய்
பணி செய்யவும்,
மாலை
கடற்கரையில் அலைகளோடு
பேசவும்,
வீடு திரும்பிய பின்
அம்மாவின் நறும காபியை சுவைக்கவும், 
இரவு இளையராஜாவின்
பாடலோடு உறங்கவும்
முடிந்தது,
என்னால்
 இன்று 
என் கனவுகளில் மட்டும்!!


குழந்தையின் பசியறிந்து
உணவு ஊட்டும் தாய் போல,
என் மனப்பசியறிந்து
தினமும் எனக்கு
உன் காதலை ஊட்டுகிறாய்!!


நாம் இருவரும் ஆடும், 
காதல் கண்ணாம்பூச்சியில்,
உன்னை கண்டுபிடிக்க முடியாமல்,
எனக்குள்ளே தொலைந்துகொண்டே
இருப்பவன் நீ!


உன்னோடு
இரவில் கூடி களித்து,
மகிழ்ந்த பின்னே,
காலையில் எழுந்ததும்,
உதரி மடித்த படுக்கைக்கு நடுவே,
மீதமாய் கலைந்து கிடந்தது
என் வெட்கம்!!

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...