May 9, 2017



பாறையில்
இருந்து
கசிந்து கொண்டே
இருக்கும் நீர் போல,
என்
மனதில் இருந்து
கசிந்து கொண்டே
இருக்கும்,
உன் மேல்

எனக்குள்ள காதல்!!!






வெட்கம்!!


கைகளால் உன் முகத்தை 
நீ மறைத்தாலும், 
உன் கைகளின் 
இடுக்கு வழியே வழிந்தோடியது 
உன் வெட்கம்!!




நாம் இருவரும் ஆடும்
காதல் கண்ணாம்பூச்சியில்,
உன்னை கண்டுபிடிக்க முடியாமல்,
எனக்குள்ளே தொலைந்துகொண்டே

இருப்பவள் நீ!







ரயில் சினேகங்கள்!! 

அரக்க பரக்க ஓடிவந்துமூச்சிரைக்க
ரயிலேறி,இடம் பார்த்து அமர்ந்து,
எதிரே இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லி,
நான் திருச்சிங்கநீங்க?
என ஊர் கதைகள் பேசி,
வாங்கும் திண்பண்டங்களை அவர்களோடு பகிர்ந்து உண்டு,
குழந்தைகள் படிப்புபள்ளி,
கல்லூரி செலவுகள்நாட்டுநடப்பு,
அரசியல்,சினிமா பேசி,
வேலைவாய்ப்பு பற்றி அரட்டை முடித்து,
பொழுது போய்,தூங்கி எழுந்து,
பல் விலக்கி,காபி குடித்து,
மறுபடி
ஒரு குட்மார்னிங் சார்!! சொல்லி,
இரண்டு
நிமிட உரையாடல் பின்னர்,
இறங்க வேண்டிய இடம் வருமுன்
மூட்டை
முடிச்சை தயார் செய்து,
சரி
சார்.. அப்புறம் பார்க்கலாம்!!
என்றொரு பெரிய
சிரிப்புடன் முடிந்து போகும்,
நாம்

கடந்து செல்லும் ரயில் சினேகங்கள்!!





பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...