காலையில்,,
கதிரவனின் முகத்தில்முழிக்கவும்,
வழியில்
கோயில் பிள்ளையாரை தரிசிக்கவும்,
சாலை கடக்கும் முதியோர்க்கு
உதவவும்,
அலுவலகத்தில் உற்சாகமாய்
பணி செய்யவும்,
மாலை
கடற்கரையில் அலைகளோடு பேசவும்,
வீடு திரும்பிய பின்
அம்மாவின் நறுமண காபியை சுவைக்கவும்,
இரவு இளையராஜாவின் பாடலோடு
உறங்கவும் முடிந்தது,
என்னால்
இன்று என் கனவுகளில் மட்டும்!!
No comments:
Post a Comment